News April 29, 2024

ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு

image

கர்நாடகாவின் சாமராஜநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹனூர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாக்கு இயந்திரங்கள் சூறையாடப்பட்டன. இதனால், இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Similar News

News August 15, 2025

CSK வீரருக்கு அடித்த ஜாக்பாட்: அஸ்வின்

image

CSK வீரர் Devald Brevis-க்கு கடந்த IPL சீசனில் ஜாக்பாட் அடித்ததாக, அந்த அணியின் ஸ்டார் பவுலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை வாங்குவதில் கடும் போட்டி நிலவியதால், அதிக விலை கொடுத்து எடுத்ததாக கூறியுள்ளார். அவரது அடிப்படை விலை ₹75 லட்சமாக இருந்த நிலையில், ₹2.2 கோடி கொடுத்து CSK வாங்கியதாக தெரிவித்துள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக Brevis வந்தார்.

News August 15, 2025

ராசி பலன்கள் (15.08.2025)

image

➤ மேஷம் – பக்தி ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – பயம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – பிரீதி ➤ விருச்சிகம் – உயர்வு ➤ தனுசு – வரவு ➤ மகரம் – தடங்கல் ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்சொல்.

News August 15, 2025

ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் நிலைத்திருக்கும்: ஜனாதிபதி

image

இந்திய ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பு உலகத்திற்கு தேவையான மாடல் என கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் சமாளிக்கும் என்பது ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!