News April 22, 2024
பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வன்முறை நடந்தது. அதனால், இன்று அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Similar News
News November 12, 2025
மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்: அப்பாவு

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் SIR பணி நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், PM மோடியின் ஆணையை ஏற்று நடக்கும் அமைப்பாக அது மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு முன்பு ECI எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
News November 12, 2025
உங்களுக்கு மாரடைப்பு வருமா? 2 நிமிடங்களில் அறிய முடியும்

இளம் வயதினரும் மாரடைப்பால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாரடைப்பு வருவதை முன்னதாகவே அறிய CT Calcium Scoring என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஓமந்தூரார் GH-ல் ₹500 செலுத்தி 2 நிமிடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த மெஷின் எப்படி செயல்படுகிறது, டெஸ்ட் எடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க. SHARE IT.
News November 12, 2025
ஏற்றத்துடன் முடிந்த சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்து 84,466 புள்ளிகளிலும், நிஃப்டி 177 புள்ளிகள் உயர்ந்து 25,872 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. Asian Paints, HDFC Life, TCS, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் 3 – 5% உயர்ந்ததால் அதில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. நீங்கள் வாங்கிய பங்குகள் உங்களுக்கு லாபம் தந்ததா?


