News June 13, 2024
பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம்

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 11 செப்டம்பர் 2019 அன்று முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, அவரது பதவிக்காலத்தை 2ஆவது முறையாக நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நியமன உத்தரவு பிரதமரின் பதவிக்காலம் வரை அமலில் இருக்கும் என மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 6, 2025
இந்த விளையாட்டை இந்தியா கண்டுபிடித்ததா?

இந்தியாவில் அதிகமாக நேசிக்கப்படும் மற்றும் விளையாடப்படும் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது. ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து. அதேசமயம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா? நீங்க எதிர்பாக்காத பல விளையாட்டுகளை நம்ம ஆளுங்கதான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த விளையாட்டுகள் மேலே வரிசைபடுத்தியுள்ளோம். SHARE IT
News September 6, 2025
ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர்

திருமாவளவனை திமுகவின் கொத்தடிமை என விமர்சித்த ஏர்போர்ட் மூர்த்தியை விசிகவினர் செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிஜிபி அலுவலம் அருகே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மற்றும் யூடியூபரான ஏர்போர்ட் மூர்த்தியை நடுரோட்டில் வைத்து காலணிகளால் விசிகவினர் தாக்கியுள்ளனர். ஏர்போர்ட் மூர்த்தி திருமாவளவனின் நடத்தை குறித்து அவதூறு பரப்புவதாகவும் விசிகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
News September 6, 2025
தங்கத்தை விட சிறந்த முதலீடு இதுதான்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், அதற்கு பதிலாக ரிஸ்க் அதிகமாக இருந்தாலும் மியூச்சுவல்ஃபண்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் பார்க்கலாம் என நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த கால நிதி தேவைகளுக்கு தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் குழந்தைகளின் படிப்பு & நல்ல வருங்காலத்திற்கு, பணம் இரட்டிப்பாகும் SIP முறையில் MF-களில் முதலீடு செய்வதுதான் தான் நல்லது என்கின்றனர்.