News April 21, 2024
பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் RCB அணி

KKR-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது. இதுவரை 13 போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ள பெங்களூரு அணி, அதில் 4இல் வெற்றியும், 8இல் தோல்வியும் அடைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணிக்கு, இன்றைய போட்டியில் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Similar News
News November 12, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.64 உயர்ந்து $4,137-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று (நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்து, ₹93,600 -க்கு விற்பனையானது. SHARE.
News November 12, 2025
கூண்டோடு கட்சியில் இணைந்தனர்

கடந்த செப்டம்பரில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ (NMMK) என்ற புதிய கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் NMMK-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின் பி.எல்.ஏ.ஜெகநாத் பேசுகையில், ஒத்த கருத்துடைய கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.
News November 12, 2025
படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக விளங்க..

புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. புதன் கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசியை பெருமாளுக்கு சாத்த வேண்டும். தொடர்ந்து, நவகிரக சன்னதியில் உள்ள, புதன் பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வழிபாட்டினை தொடர்ந்து செய்வதால், பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.


