News April 20, 2025

யார்க்கரால் பஞ்சாப்பை கதிகலங்க வைத்த RCB

image

RCB-க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் பின் பஞ்சாப் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கடைசி 4 ஓவரில் வெறும் 22 ரன்களை மட்டுமே புவனேஷ்வர் குமாரும், ஹேஷல்வுட்டும் விட்டுக்கொடுத்தனர். இதில் ஒரு சிக்ஸர் மட்டுமே பஞ்சாப் அணியால் அடுக்க முடிந்தது. துல்லியமாக இருவரும் 17 யார்க்கர்களை வீசியதால் பஞ்சாப் ரன்களை சேர்க்க முடியவில்லை.

Similar News

News November 5, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளமான www.pmfby.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக தலைவர்கள்

image

அதிமுக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களை தொடர்ந்து மருது அழகுராஜ், தற்போது மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் இருக்கும் தஞ்சையை சேர்ந்த முக்கிய தலைவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 5, 2025

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும்

image

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும் என IMD கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துக் கொள்ளவும்.

error: Content is protected !!