News March 31, 2025
சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி… எதில் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. 17.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சிஎஸ்கே இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனா, இதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்க என சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Similar News
News April 2, 2025
75 ஆண்டு கால உறவு.. வாழ்த்து கூறிய சீன அதிபர்

இந்தியா- சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் முர்முவுக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், இருதரப்பு உறவுகள் டிராகன்- யானை நடன வடிவத்தை எடுக்கவும், நீண்டகால கண்ணோட்டத்தில் இருந்து இருதரப்பு உறவுகளை கையாளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுவான வளர்ச்சியை உறுதிசெய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக்கொண்டார்.
News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
News April 2, 2025
1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.