News April 10, 2025
RBI-யின் புதிய விதி: இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!

RBI-ன் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியுள்ளது. *கடனளிப்பவரின் Risk Management-ஐ ஆராய வேண்டும்.*முறையாக மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும்.*கடன் வாங்குபவர் அதைத் திருப்பி மீட்கும் தகுதி உள்ளவரா என்பதை செக் செய்ய வேண்டும்.*1 கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது ஆகிய விதிகளால் தங்க நகைக் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் எனப் பலரும் புலம்பி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
2050-ல் குடிக்க சுத்தமான நீர் கூட கிடைக்காது!

2050-ல் உலகம் முழுவதும் 22 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என சர்வதேச ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. வியன்னாவின் MCH, உலக வங்கி இணைந்து ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் நகர்ப்புறமாக்கல் தொடர்ந்தால் 19 கோடி பேர் கழிவுநீர் வெளியேற்ற வசதி இல்லாமல் அவதிப்படுவார்கள், நீருக்காக அதிக விலை கொடுக்க வேண்டியது வரும் என்றும் தெரியவந்துள்ளது.
News December 7, 2025
11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) TN-ல் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் கவனமாக பயணிக்கவும் மக்களே. உங்கள் ஊரில் மழை கொட்டுகிறதா?
News December 7, 2025
டிசம்பர் 7: வரலாற்றில் இன்று

*1926–அரசியல்வாதி கே.ஏ.மதியழகன் பிறந்தநாள் *1939–பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்தநாள் *1941–PEARL HARBOUR தாக்குதலில் 2,402 வீரர்கள் உயிரிழந்தனர்
*1949-கொடி நாள் கடைபிடிப்பு *2016–நடிகர், பத்திரிகையாளர் சோ நினைவு நாள்


