News April 29, 2025
₹100, ₹200 நோட்டுகள் குறித்து RBI முக்கிய முடிவு!

ATMகளில் பணம் எடுக்கும் போது, தற்போது ₹100, ₹200 நோட்டுகள் பெரிதாக கிடைப்பதில்லை. இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இதனால், இனி அனைத்து ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. செப். மாதத்திற்குள் நாட்டில் 75% ATMகளிலும், மார்ச் 2026-க்குள் 90% ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. உங்களுக்கு ATMகளில் ₹100, ₹200 கிடைக்குதா?
Similar News
News December 6, 2025
புதிய பாபர் மசூதியின் தற்போதைய நிலை என்ன?

1992, இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019-ல் SC அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான வரைபடத்தை இறுதி செய்யும்பணி முடியும் நிலையில் உள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான காலக்கெடு 2026, ஏப்ரலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
News December 6, 2025
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 6, 2025
விஜய்யை சந்தித்தது தெரியாது: செல்வப்பெருந்தகை

காங்., நிர்வாகி <<18476742>>பிரவீன் சக்கரவர்த்தி<<>> விஜய்யை சந்தித்தது பேசுபொருளானது. இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி தனக்கு தெரியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி பற்றி மேலிடத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளதாக கூறிய அவர், திமுகவோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


