News August 27, 2024
AI பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கை விடுத்த RBI

கடன் வழங்கல், முதலீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் AI பயன்பாடு தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார். முக்கிய முடிவுகளை எடுக்கும் பிரிவுகளில் AI மாதிரியைக் கைக்கொள்ளும் நிதி நிறுவனங்கள், தனிநபர் தரவுகள் பாதுகாப்பு, அவற்றின் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கும் திறனை பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 30, 2025
ஹாஸ்பிடலில் இருந்து ஷ்ரேயஸ் போட்ட பதிவு

ரத்த கசிவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயஸ் தனது உடல்நிலை குறித்து X-ல் பதிவிட்டுள்ளார். தற்போது குணமடைந்து வருவதாகவும், தன்னுடைய உடல்நலனில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலக்கட்டத்தில் தன் மீது அனைவரும் காட்டிய அன்புக்கும், தனக்காக செய்த பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
News October 30, 2025
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே. செல்வகுமார், அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருதரப்பும் சீட் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் வகையில், செல்வகுமார் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, சீட் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
News October 30, 2025
அணு ஆயுத போருக்கு ரெடி: டிரம்ப் சூசகம்!

ரஷ்யா சமீபத்தில் 2 அணுசக்தி ஆயுதங்களை சோதித்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகளை தொடங்குமாறு, USA போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிற நாடுகளின் அணு ஆயுத சோதனைகளால் தான் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், உலகின் வேறு எந்த நாட்டையும் விட USA-விடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சோதனைகளை நிறுத்திவிட்டு, உக்ரைன் போரை முடிக்குமாறும் புதினுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


