News August 27, 2024
AI பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கை விடுத்த RBI

கடன் வழங்கல், முதலீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் AI பயன்பாடு தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார். முக்கிய முடிவுகளை எடுக்கும் பிரிவுகளில் AI மாதிரியைக் கைக்கொள்ளும் நிதி நிறுவனங்கள், தனிநபர் தரவுகள் பாதுகாப்பு, அவற்றின் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கும் திறனை பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 13, 2025
CINEMA ROUNDUP: ‘பராசக்தி’ படத்தில் இணைந்தார் யுவன்!

*நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவியின் செல்போனை ஹேக் செய்தவர் கைது செய்யப்பட்டார். *கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது .
*அர்ஜுனின் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
*ஜிவி இசையமைக்கும் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.
News November 13, 2025
தூய்மை பணியாளர்களை ஒடுக்கும் அரசு: டிடிவி தினகரன்

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை, ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயல் என TTV தினகரன் சாடியுள்ளார். சென்னை, கோவை, தூத்துக்குடி என பல பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கும் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 13, 2025
8,858 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <


