News May 21, 2024
₹1 லட்சம் கோடியை அரசு கருவூலத்திற்கு அளிக்கும் RBI

மே மாத இறுதிக்குள் ₹1 லட்சம் கோடி ஈவுத்தொகையை அரசு கருவூலத்திற்கு ஆர்.பி.ஐ., அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கருவூல மசோதா மூலம் அரசு கடன் வாங்குவதை பெருமளவில் குறைத்த ஆர்.பி.ஐ., இந்திய அரசின் கடன் மேலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு வாங்கிய ₹60,000 கோடியை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த தயாராகி வருகிறது. கடந்தாண்டு கருவூலத்திற்கு ₹87,400 கோடியை ஆர்.பி.ஐ., வழங்கியுள்ளது.
Similar News
News September 14, 2025
BREAKING: நாடு முழுவதும் இந்த வங்கி சேவை முடங்கியது

HDFC வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். வங்கி சேவை மட்டுமின்றி, UPI பரிவர்த்தனையும் தடைப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான இன்று, காலையிலேயே Server Down என்பதால், கடைகளுக்கு சென்ற பலரும் UPI-ல் பணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கு வேலை செய்யுதா HDFC சேவைகள்?
News September 14, 2025
IND vs PAK: அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா?

பும்ரா, அக்ஷர், வருண், குல்தீப் ஆகிய மெயின் பவுலர்கள், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11-ல் உள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பாக்.,க்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஏற்கெனவே உள்ள பிளேயிங் 11-ல் எந்த மாற்றமும் இல்லை என்று துணை கோச் ரயான் டென் டெஸ்கொத்தே கூறியுள்ளார். எனவே காயமடைந்துள்ள கில்லும் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.
News September 14, 2025
உக்ரைன் போருக்கு எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

உக்ரைனில் 2022-ல் இருந்து நடந்து வரும் போர், அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் 1 வருடத்துக்கு மட்டும் ₹10.5 லட்சம் கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போர் நின்றாலும் இதே தொகை தங்களுடைய ராணுவ படையை பராமரிக்க தேவைப்படும் எனவும் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் டென்னீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில், உக்ரைனுக்கு அதிகமாக (₹6 லட்சம் கோடி) USA நிதியுதவி வழங்கியிருக்கிறது.