News June 15, 2024
சென்ட்ரல் வங்கிக்கு RBI ₹1.5 கோடி அபராதம்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி, ₹1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. அதன் 2022ம் நிதியாண்டிற்கான கணக்குகளை ஆய்வு செய்ததில், மின்னணு பணப்பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காதது, கடன்கள் மற்றும் முன்தொகை தொடர்பான உத்தரவுகளை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்ட ரிசர்வ் வங்கி, தற்போது அந்த வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது.
Similar News
News November 13, 2025
ஆம்னி பஸ் முடக்கத்துக்கு திமுக காரணம்: அண்ணாமலை

திமுகவின் பேராசையால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு பிற மாநில வாகனங்களுக்கு கூடுதல் சாலை வரி விதித்ததால், அம்மாநிலங்கள் தற்போது TN ஆம்னி பஸ்களுக்கு அதிக வரியை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணி கட்சிகள் மாநிலங்களிடம் பேசி பிரச்னையை பேசி தீர்க்காமல், மக்களை ஸ்டாலின் பலிகடா ஆக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 13, 2025
பெண்களுக்கு மாதம் ₹1200 தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

கணவனை இழந்து, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 40- 79 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதம் ₹1,200 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின், பயனாளி 80 வயதை அடைந்த பிறகு, அவருக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து முதியோர் ஓய்வூதியமாக மாதம் ₹500 வழங்கப்படும். விதவை சான்றிதழ், ஆதார், Voter ID, BPL அட்டை, முகவரி சான்றுடன் இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பல பெண்களுக்கும் பயனுள்ள இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 13, 2025
முடிவுக்கு வருகிறது அமெரிக்க அரசின் முடக்கம்

USA-வில் காப்பீட்டு திட்டத்தின் மானியங்களை விடுவிப்பது தொடர்பான மோதலில் அரசுக்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அரசு முடங்கியது. இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, அந்நாட்டின் மிக நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிதி மசோதா மீது வாக்களிப்பை தொடங்கியது. ஜனநாயக கட்சி எதிர்த்தாலும், குடியரசு கட்சி 213-209 என்ற வாக்குகளில் மசோதாவை இறுதி வாக்கெடுப்புக்கு நகர்த்தியுள்ளது.


