News March 25, 2025
ATM சேவை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி

ATMகளில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியின் ATMல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ₹17ல் இருந்து, ₹2 அதிகரிக்கப்பட்டு ₹19ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு RBI ஒப்புதல் அளித்துள்ளது. ரொக்கம் அல்லாத ATM பரிவர்த்தனைகளான மினிமம் பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு ₹6ல் இருந்து ₹7ஆக கட்டணம் உயருகிறது.
Similar News
News October 24, 2025
குல்தீப் ஓரங்கட்டப்பட கம்பீர் காரணமா?

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விக்கெட் எடுக்கும் திறமை குல்தீப்புக்கு உண்டு. எனினும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குல்தீப் அணியில் இருந்தாலும், XI-ல் விளையாடுவது இல்லை. ஆஸி., தொடரில் அக்ஷர், வாஷிங்டன் என 2 ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். பேட்டிங்கிற்கு கம்பீர் கொடுக்கும் முக்கியத்துவமே இதற்கு காரணம் என ரசிகர்கள் SM-ல் குற்றம்சாட்டி வருகின்றனர்.
News October 24, 2025
இந்த பழங்கள் சாப்பிட்டால் சளி கிட்டவே நெருங்காது!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை முதலில் வாட்டி வதைப்பது சளிதான். இதை தடுக்க சில பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேபோல் மழைகாலத்தில் நாம் தவிர்க்கும் ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம்.
News October 24, 2025
கரூர் விவகாரம்: CBI பதிவு செய்த FIR கோர்ட்டில் தாக்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் நாட்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.


