News March 25, 2025
ATM சேவை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி

ATMகளில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியின் ATMல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ₹17ல் இருந்து, ₹2 அதிகரிக்கப்பட்டு ₹19ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு RBI ஒப்புதல் அளித்துள்ளது. ரொக்கம் அல்லாத ATM பரிவர்த்தனைகளான மினிமம் பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு ₹6ல் இருந்து ₹7ஆக கட்டணம் உயருகிறது.
Similar News
News December 7, 2025
கனடா எல்லையில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் எல்லையில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வனப்பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றாலும், இந்த வனப்பகுதிக்கு அருகே 91 கி.மீ., தூரத்தில் மக்கள் வசிப்பதாக USGS தெரிவித்துள்ளது. இந்நிலையில், சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
News December 7, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.


