News December 29, 2024

மாணவர்களுக்கு பகுத்தறிவு: அமைச்சர் முக்கிய உத்தரவு

image

மதுரையில் நடந்த ‘விஞ்ஞானத் தேடல்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார். அப்போது அவர், இந்த காலத்தில் பிள்ளைகளை பகுத்தறிவுடன் வளர்ப்பது மிக சவாலான விஷயம் எனக் கூறினார். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பகுத்தறிவை கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Similar News

News July 10, 2025

தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

image

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

News July 10, 2025

276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை

image

தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News July 10, 2025

பாலியல் புகாரளித்த நடிகை… சிக்கும் சாமியார்

image

இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.

error: Content is protected !!