News June 22, 2024
ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களை சேர்க்க, கடந்தாண்டு ஜூலை 23 கடைகள் திறக்கப்பட்டன. அந்த விடுமுறையை ஈடுசெய்ய, கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை 4ஆவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
ராமநாதபுரம்: கடையில் ரூ.25 ஆயிரம் அபராதம்

உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமேஸ்வரம் மண்டபம் உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் ஆகியோர் இன்று காலை போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரக்குடியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ரூ25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
News September 16, 2025
தமிழகத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது: குஷ்பு

தமிழகத்தில் குடும்ப அரசியல் மட்டுமே நடப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாராட்டு விழாவில் CM குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததாகவும், ஆனால் அவரது இசையில் பாடிய பெண்களில் ஒருவருக்கு கூட நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துள்ளதாக குஷ்பு கூறியுள்ளார்.
News September 16, 2025
பெண்களே Gemini AI-ல் போட்டோ Upload பண்றீங்களா?உஷார்!

Gemini AI-ன் போட்டோக்கள் தான் தற்போதைய டிரெண்ட். ஆனால், இளம்பெண் ஒருவர் போட்டோக்களை Upload செய்யும் போது, கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளார். Gemini AI-ல் அவர் கை மூடிய சுடிதார் அணிந்த போட்டோவை Upload செய்த போதும், அவர் கையிலுள்ள மச்சம் Gemini AI உருவாக்கிய போட்டோவில் சரியாக இடம்பிடித்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பி, இது தன்னை அச்சமடைய செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


