News February 25, 2025
ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் பொருள்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அனைத்து பொருள்களையும் வழங்க உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பொருள்களும் தரத்துடன் இருப்பதையும், எடை சரியாக இருப்பதையும் உறுதி செய்யவும் ஆணையிட்டார். அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
Similar News
News February 25, 2025
IND அணிக்கு கூடுதல் சாதகம்: கம்மின்ஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளதாக AUS வீரர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக உள்ள இந்திய அணிக்கு உதவும் எனவும், ஒரே மைதானத்தில் மொத்த தொடரையும் விளையாடுவது, அந்த மைதானத்தை வீரர்கள் முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். காயம் காரணமாக AUS அணியில் கம்மின்ஸ் இடம்பெறவில்லை.
News February 25, 2025
ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடு, பிரென்ட் கச்சா விலை அதிகரிப்பு ஆகியவை இன்று எதிராெலித்தது. இதனால் இன்று (பிப்.25) காலை வர்த்தக நேரத் தொடக்கத்தில் ரூ.86.72ஆக இந்திய ரூபாய் மதிப்பு இருந்தது. பின்னர் சட்டென 16 காசுகள் சரிந்து ரூ.86.88ஆக வர்த்தகமானது.
News February 25, 2025
ஜீவாவுக்கு ராஷி கன்னா செய்த சத்தியம்

பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ராஷி கன்னா பிராமிஸ் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ‘அகத்தியா’ பட புரொமோஷன் விழாவில் பேசிய அவர், இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸை பார்த்து பிரமிப்படைந்ததாகவும், இப்படத்திற்காக இயக்குநர் பா.விஜய் அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.