News March 26, 2025

29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

image

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

Similar News

News November 27, 2025

இதை கட்ட ₹24 லட்சம் செலவு.. ஊழலில் மலிந்துள்ள நாடு!

image

இந்தியா ஏழை நாடல்ல, ஏழையாக்கப்பட்ட நாடு என்ற கூற்று, இது போன்ற சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது. மேலே உள்ள போட்டோவை பாருங்க.
ம.பி.யின் ஜுன்னார்தேவ் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமூகநல கட்டடம் இது. இந்த 15 தூணை கட்ட சுமார் ₹24 லட்சத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செலவு செய்துள்ளனர். ஒரு மூட்டை சிமெண்டுக்கு ₹1.92 லட்சம் எனவும் கணக்கு எழுதி வைத்துள்ளனர். மக்களின் வரி பணம், இப்படிதான் வீணாகிறது!

News November 27, 2025

சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.

News November 27, 2025

ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

image

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.

error: Content is protected !!