News March 26, 2025

29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

image

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

Similar News

News November 24, 2025

இந்த பொம்மையால் குழந்தைக்கு ஆபத்து.. BIG ALERT!

image

குழந்தைகள் இருக்கும் வீட்டில் டெடி பியர் போன்ற சாஃப்ட் டாய்ஸ்கள் கட்டாயம் இருக்கும். இப்படி நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கித்தரும் பொம்மையால் உங்கள் குழந்தையின் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படலாம். ஆம், சாஃப்ட் டாய்ஸ்களில் உள்ள முடி எளிதில் உதிரக்கூடியவை. அந்த முடி குழந்தைகள் சுவாசிக்கும்போது அவர்களின் உடலுக்குள் போகலாம். இதனால் அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

News November 24, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் 3 நாள்கள் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. டெல்டா & தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று இதேபோல் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. SHARE IT.

News November 24, 2025

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

image

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!