News March 26, 2025
29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
Similar News
News December 7, 2025
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு அதிகரிப்பு: EPS

குமரி, தென்காசி, நாகர்கோவில், சேலம், மயிலாடுதுறை பகுதிகளில் நேற்று நடைபெற்ற கொலை, வழிப்பறி சம்பவங்கள், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு போய் உள்ளதை காட்டுவதாக EPS விமர்சித்துள்ளார். ஆனால், CM ஸ்டாலின் சுய விளம்பரத்தில் திளைப்பதாகவும் சாடியுள்ளார். எனவே, ஆட்சியில் இருக்கவுள்ள 4 மாதங்களிலாவது சட்ட ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் EPS வலியுறுத்தியுள்ளார்.
News December 7, 2025
வசூல் வேட்டையில் மம்முட்டியின் ‘களம்காவல்’

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘களம்காவல்’ திரைப்படம் டிச.5-ம் தேதி வெளியானது. மம்முட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ள இந்த படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ள இந்த படம், முதல் நாளிலேயே ₹15.7 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
News December 7, 2025
TN-ல் பெரியாரின் சமத்துவ தீபம் தான் எரியும்: CM

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரிவினையை ஏற்படுத்த பாஜகவினர் நினைப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மலிவான அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த அவர், இந்த கூட்டம் குறித்து மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் எனக்கூறினார். மதுரையில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எப்போதும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என குறிப்பிட்டார்.


