News March 26, 2025
29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
Similar News
News December 4, 2025
ரயில்வேயில் 1,785 பணியிடங்கள்; APPLY NOW!

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள். SHARE.
News December 4, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹96,160-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால், நம்மூரிலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக விலை குறைந்துள்ளது.
News December 4, 2025
திணறும் இண்டிகோ: பயணிகள் அவதி!

விமான பணியாளர்களின் புதிய பணி நேர வரம்பு, ஏர்பஸ் A320 பிரச்னை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், நேற்று இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவித்தனர். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்துள்ளது. நாளை (டிச.5) வரை மேலும் விமானங்கள் ரத்தாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


