News December 20, 2024
ரேஷன் கொள்முதல் விவகாரம்: அரசு விளக்கம்

தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி ரேஷன் பொருள்கள் வாங்க ஆணை என்று அண்மையில் செய்தி வெளியானது. இதற்கு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தரமான பாமாயில், பருப்பு வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 3, 2025
ஏலத்தில் இந்த வீரரை CSK வாங்கும்: அஸ்வின்

2026 ஐபிஎல் ஏலத்தில் CSK அணி டிம் சீஃபர்ட்டை வாங்கும் என அஸ்வின் கணித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் அவர், CSK அணியில் கான்வே அல்லது ரச்சின் தொடரவில்லை என்றால் தொடக்க வீரராக டிம் சீஃபர்ட்டை ஏலத்தில் வாங்க கூடும் என்றார். ஒரு வேளை CSK அவரை வாங்க தவறினால், வேறு அணிகள் அவரை நிச்சயம் வாங்க கூடும் என அஸ்வின் தெரிவித்தார். டிம் சீஃபர்ட் சமீபத்தில் CPL-ல் 53 பந்தில் 125 ரன்கள் குவித்திருந்தார்.
News September 3, 2025
சாதிப் பெருமை பேசினால் முதலாளியாக முடியாது: திருமா

அம்பானி, அதானிக்காக பாஜக அரசு பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். நமது இளைஞர்கள் சாதிப் பெருமை பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் எனவும், அவர்களால் கார்ப்பரேட் முதலாளியாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பால் அம்பானியோ, அதானியோ பாதிக்கப்பட போவதில்லை, மாறாக சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.