News September 28, 2025
ஒரே நாளில் ரேஷன் கார்டு.. வழிமுறைகள் இதோ!

TN-ல் ரேஷன் கார்டுக்கு மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா? என்றால் முடியும். அதற்கான வழி இருக்கிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் ஆபிஸில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தால் உடனடியாக பரிசீலனை செய்து கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கூட பலருக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு, பட்டா, ஓய்வூதிய சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News December 9, 2025
டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.
News December 9, 2025
குழந்தைகள் அறிவாளிகள் ஆக இந்த ஒரு பழக்கம் போதும்!

பெற்றோர்களே, உங்கள் குழந்தை புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு நிச்சயமாக இருக்கும். இதற்கு, ஓயாமல் நோண்டிக் கொண்டிருக்கும் செல்போன்களை ஓரங்கட்டிவிட்டு, அவர்களிடம் நல்ல புத்தகம் ஒன்றை கொடுங்கள். தினமும் இரவு நேரத்தில் 15 நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் புத்தக வாசிப்பில் ஈடுபடலாம். இதை தினமும் செய்துவர அவர்களின் அறிவுத்திறன் வளரும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News December 9, 2025
₹4,000 தரும் PM யாசஸ்வி திட்டம்.. அவகாசம் நீட்டிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.15 வரை <


