News September 28, 2025
ஒரே நாளில் ரேஷன் கார்டு.. வழிமுறைகள் இதோ!

TN-ல் ரேஷன் கார்டுக்கு மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா? என்றால் முடியும். அதற்கான வழி இருக்கிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் ஆபிஸில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தால் உடனடியாக பரிசீலனை செய்து கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கூட பலருக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு, பட்டா, ஓய்வூதிய சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News September 28, 2025
PM மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி CPR!

டெல்லியில், PM மோடியை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் நிகழ்ந்த துயரம் தொடர்பாக PM மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனுடன், பலதரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக PM மோடி தனது X பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
அடித்து ஆடும் பாகிஸ்தான்

இந்தியா உடனான ஃபைனலில் பாகிஸ்தான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது. ஓப்பனிங் இறங்கிய ஃபர்ஹான் 57 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல், ஓபனிங் இறங்கி அவுட் ஆகாமல் சமான் 33 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். வருண் சக்கரவர்த்தி மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
News September 28, 2025
இப்படி குழந்தை பெற்றால் வலி இருக்காதா?

பெண்களுக்கு பிரசவம் என்பது வலி நிறைந்த அனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் நீரில் குழந்தையை பெற்றெடுப்பதால் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தமும் வலியும் குறைகிறதாம். வெதுவெதுப்பான நீர், தசைகளை தளர்த்தி, பிரசவத்தை எளிதாக்குகிறது. இதனால் தாயின் ரத்த அழுத்தம் சீராகிறது. எனவே மற்ற பிரசவ முறைகளை விட இந்த பிரசவ முறை எளிதாக இருக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். SHARE.