News September 26, 2024

புதிதாக 80,000 பேருக்கு ரேஷன் அட்டை

image

பொருள் வாங்க மட்டுமன்றி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் ரேஷன் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து புதிதாக அட்டை கோரி 2,89,591 பேர் மனு அளித்துள்ளனர். இதை பரிசீலித்து, தேர்தலுக்கு பிறகு 1.22 லட்சம் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 80,050 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 99,300 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 68,291 பேருக்கு விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News August 12, 2025

தொடரும் போர்! மோடியிடம் கோரிக்கை வைத்த ஜெலன்ஸ்கி

image

ரஷ்யாவின் தாக்குதல் குறித்து PM மோடியுடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார். போர் நிலவரம் குறித்து ஜெலன்ஸ்கியிடம் கேட்டறிந்ததாக X தளத்தில் தெரிவித்த மோடி, போரை நிறுத்த இந்தியாவால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

SPORTS ROUNDUP: WC ODI-யை வெல்வோம்.. ஹர்மன்பிரீத் கவுர்

image

◆சின்சினாட்டி ஓபன்: 3 மணி நேரம் நடந்த போட்டியில் அரினா சபலேங்கா(பெலாரஸ்) (7-3) 4-6 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி எம்மா ராடுகானுவை (பிரிட்டன்) வீழ்த்தினார்.
◆மகளிர் உலக கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்.. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதி.
◆WC T20 2026 தொடருக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
◆ கர்நாடகாவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. 80,000 இருக்கை வசதி இருக்கும்

News August 12, 2025

திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்

image

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக அரசு இயற்றாதது ஏன் சிபிஎம் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது புரியாத புதிராக இருப்பதாக கூறிய அவர், இத்தகைய செயல் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது என்றார். மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து EPS பேசாதது ஏன் என்று கேட்ட அவர், சொந்த முகவரியை இழந்து நிற்கிற கட்சி என்றால் அது அதிமுகதான் என விமர்சித்தார்.

error: Content is protected !!