News March 17, 2025
டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்ட்.. பறிபோன உயிர்

பல நேரங்களில் சிறிய அலட்சியம் கூட, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். கேரளாவில் பாலக்காட்டில் 3 வயது சிறுமி நேகா ரோஸ், காலையில் எழுந்ததும் பல் துலக்க பாத்ரூம் சென்றுள்ளாள். பேஸ்ட் என நினைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எலி பேஸ்ட்டை எடுத்து பிரஷ் செய்தவுடன் மயங்கி விழுந்துள்ளாள். பெற்றோர் பதறியடித்து குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகள் விஷயத்தில் கவனமா இருங்க, ப்ளீஸ்!
Similar News
News March 18, 2025
மார்ச் 18: வரலாற்றில் இன்று!

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)
News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 210
▶குறள்: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
▶பொருள்: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.