News March 17, 2025

டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்ட்.. பறிபோன உயிர்

image

பல நேரங்களில் சிறிய அலட்சியம் கூட, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். கேரளாவில் பாலக்காட்டில் 3 வயது சிறுமி நேகா ரோஸ், காலையில் எழுந்ததும் பல் துலக்க பாத்ரூம் சென்றுள்ளாள். பேஸ்ட் என நினைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எலி பேஸ்ட்டை எடுத்து பிரஷ் செய்தவுடன் மயங்கி விழுந்துள்ளாள். பெற்றோர் பதறியடித்து குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகள் விஷயத்தில் கவனமா இருங்க, ப்ளீஸ்!

Similar News

News March 17, 2025

வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

image

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.

News March 17, 2025

சாலை விபத்தில் கேரள பாடகர் பலி

image

கேரளாவில் பாடப்படும் முஸ்லிம் நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாக கொண்டது மாப்பிளாப்பாட்டு பாடல். இப்பாடலை பாடி புகழ்பெற்றவர் பைஜாஸ் உலியில். புன்னாட்டில் காரில் அவர் நேற்றிரவு பயணித்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த பைஜாஸ் உலியில், ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர்.

News March 17, 2025

ஹிந்தி தேசிய மொழி… சந்திர பாபு அதிரடி

image

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சட்டப்பேரவையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். மொழி வெறுப்பதற்கான ஒன்று அல்ல எனக் கூறிய அவர், ஆந்திராவில் தாய்மொழி தெலுங்கு, தேசிய மொழி ஹிந்தி, சர்வதேச மொழி ஆங்கிலம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ள நிலையில் தற்போது சந்திர பாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!