News August 23, 2024
கேரளாவில் தீவிரமெடுக்கும் எலி காய்ச்சல்

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் சமீப காலமாக எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2021ல் இதற்கு 121 பேர் பலியான நிலையில், நடப்பாண்டில் ஆக.21 வரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,916 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 17, 2025
டீ கடை முதல் சாம்பியன் வரை.. என்ன ஒரு Inspiration!

ப்ரோ கபடி லீக்கில் புனேரி பல்தான் அணியை சாம்பியன் ஆக்கிய கேப்டன் அஸ்லாம் இனாம்தார், தனது கடந்த காலத்தை பகிர்ந்துள்ளார். வீட்டில் யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதால், டீக்கடையில் எச்சில் கிளாஸை கழுவுவதில் தொடங்கி அனைத்து பணிகளையும் செய்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காத்திருப்பு, சுய ஒழுக்கம், கடின உழைப்பு தான் ஒருவரை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 17, 2025
‘பாமகவில் பிளவை ஏற்படுத்தினார் அன்புமணி’

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் GK மணி வாசித்தார். அதில், கட்சியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அன்புமணி செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. சமரச பேச்சுவார்த்தையை ராமதாஸ் ஏற்றுக்கொண்டாலும், அன்புமணி ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. டிவி சேனல், பசுமை தாயகம் அமைப்பை அன்புமணி அபகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 17, 2025
படம் எடுக்கலாமா?… ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் ஆக.20-ல் தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், ‘மரங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!