News August 3, 2024

1,369 பேருக்கு எலிக்காய்ச்சல்

image

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,046 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டில் 2,612, 2023ஆம் ஆண்டில் 3,002 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டில் எலிக்காய்ச்சல் கண்டயறிப்பட்ட 1,369 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

Similar News

News January 8, 2026

தொடர் சரிவில் சந்தைகள்.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

image

பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களாகவே மீளாத சென்செக்ஸ் இன்று(ஜன.8) வர்த்தக நேர முடிவில் 780 புள்ளிகளை இழந்து 84,180 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், நிஃப்டி 263 புள்ளிகளை சரிந்து 25,876 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இந்தியா மீது <<18795308>>டிரம்ப் 500% வரி விதிக்க முடிவு<<>> செய்துள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

News January 8, 2026

JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

image

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2026

நேரு சிறை செல்வதை இனி தடுக்க முடியாது: அருண்ராஜ்

image

₹1,020 கோடி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என TVK-வின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக இதை மூடி மறைக்கப் பார்த்தீர்கள்; ஆனால் இனி நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்கள் என்று சாடிய அவர், அமலாக்கத்துறையே நேரடியாகத் தூக்கி உள்ளே வைத்துவிடும் என்ற பயத்தினால் இந்த விசாரணை உத்தரவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!