News February 28, 2025
பஸ்ஸில் பலாத்காரம்.. கொடூரன் கைது

மஹாராஷ்டிராவில் 26 வயது இளம்பெண்ணை பஸ்ஸில் ரேப் செய்த கொடூரன் தாத்தரேயா ராமதாஸ், 2 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளான். 13 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் அவனை போலீசார் கைது செய்தனர். இவன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமினில் வெளிவந்து இந்த கொடூரத்தை செய்துள்ளான். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Similar News
News February 28, 2025
காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 28, 2025
IND உடன் மோதும் அணிகளுக்கு தான் அழுத்தம்: SA வீரர்

CTயில் IND உடன் செமி ஃபைனல், ஃபைனல் மோத உள்ள அணிகளுக்கு அதிக அழுத்தம் இருக்கும் என SA வீரர் ரஸ்ஸி வான்டெர் டூசன் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் பயிற்சி செய்து, விளையாடுவது INDக்கு மிக சாதகமான ஒன்று எனவும், இதனால் அந்த மைதானத்தை அணியால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை புரிந்து கொள்வதற்கு ராக்கெட் டெக்னாலஜி அறிவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
நாட்டு மக்கள் தவிக்கும் போது.. கனிமொழி சாடல்

நாட்டில் 100 கோடி மக்கள் போதிய வருமானமின்றி தவிக்கும் செய்தியை மடைமாற்ற முயல்வதாக பாஜகவையும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்து கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல், கார்ப்பரேட் நலன்களுக்காக மத்திய அரசு பாடுபடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசு தனது மோசமான நிர்வாகத்தை மறைக்க ஹிந்தி விவகாரத்தை கையில் எடுத்தாக வைஷ்ணவ் விமர்சித்து இருந்தார்.