News February 11, 2025
ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு தோல்வி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739276569847_347-normal-WIFI.webp)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவிடம் தோல்வி அடைந்தது. இன்று நடந்த இறுதிநாள் ஆட்டத்தில் 401 ரன் இலக்கை துரத்திய தமிழ்நாடு, 202 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பிரதோஷ் ரஞ்சன் பால்(53), சோனு யாதவ்(57) ஆகிய இருவர் மட்டுமே அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இந்த ஆண்டும் தமிழகத்தின் ரஞ்சி கனவு தகர்ந்தது.
Similar News
News February 11, 2025
வெடிகுண்டு தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739292687597_1204-normal-WIFI.webp)
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, இரவு 8 மணியளவில் அங்கு சென்ற ராணுவ வீரர்கள், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
News February 11, 2025
இரவு இதை செய்யாதீங்க.. செய்தால் பிரச்னை தான்..
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739290825520_347-normal-WIFI.webp)
இரவில் லைட்டுகளை போட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இப்படி தூங்குவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக உடல்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏனென்றால் தூங்கும்போது செயல்படும் மெலடோனின் ஹார்மோன் வெளிச்சத்தில் செயல்படாது. இரவில் செல்போன் அல்லது டிவி பார்ப்பதும் பிரச்சனை தான். இன்றே மாறலாமே?
News February 11, 2025
மாட்டிக் கொண்ட Ex.துணை முதல்வர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739278553993_1204-normal-WIFI.webp)
பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக SC/ST ஆணையம் விசாரித்து வந்த நிலையில், பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதை ஆணையம் இன்று உறுதி செய்தது. இதையடுத்து, அந்த நிலத்தை ஓபிஎஸ் பெயருக்கு மாற்றியதற்கான பட்டாவை ரத்து செய்யுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.