News March 18, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

Similar News

News April 5, 2025

மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 20-25 வயதுக்குட்பட்டவர்கள் டிகிரி கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 100 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 5, 2025

ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

image

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.

News April 5, 2025

7 சவரன் செயினை பறித்த சுடிதார் கொள்ளையன்

image

பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியை அபிதா 49. இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சுடிதார் அணிந்து வந்த கொள்ளையன், அபிதா அணிந்திருந்த ஏழு சவரன் செயினை பறித்துச் சென்றான். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று எஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி ஜாபர்சித்திக் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

error: Content is protected !!