News March 17, 2024

மரநிழலில் அமர்ந்து மனுக்கள் பெற்ற இராமநாதபுரம் கலெக்டர்

image

நேற்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். மரத்தடிநிழலில் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றும்
கனிவாக பேசியும் குறைகளை கேட்டறிந்த ஆட்சியரை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்

Similar News

News August 10, 2025

மண்டபத்தில் 1000 கிலோ கடத்தல் சுக்கு பறிமுதல்

image

மண்டபம் கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக்அமீன் தலைமையில் காவலர்கள் சரவணன் முத்துக்குமார் ஆகியோர் வேதாளை கடற்பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 1000 கிலோ சுக்கு என்பது தெரிய வந்து, சரக்கு வாகனத்தையும், சுக்கு மூடைகளையும் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

News August 9, 2025

இராமநாதபுரம் மாவட்ட இரவு காவல் பணி விவரம்

image

இன்று (09.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு கொள்ள மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம். ராமேஸ்வரம், ராமநாதபுரம், கமுதி, திருவாடானை, பரமக்குடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

ராமநாதபுரத்தில் சிறுவனை காணவில்லை

image

இராமநாதபுரம் நகர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே இன்று (09.08.2025) மதியம் 2.45 மணியளவில் ‘ஜனார்த்’ என்ற 10 வயது சிறுவன் தனது தாயுடன் வந்தவர் காணாமல் போய்விட்டார். இச்சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்ககலாம். காவல் நிலைய எண் – 9498101651. சார்பு ஆய்வாளர் – 9442758281.

error: Content is protected !!