News March 17, 2024
இராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
இராம்நாடு: அரசு வீடு பெற வாய்ப்பு; 6 ஊராட்சிகளுக்கு மட்டுமே!

திருப்புல்லாணி யூனியன் குதக்கோட்டை ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டு, 84 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 வீடுகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள், சுற்றியுள்ள 6 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள்
( குதக்கோட்டை, சின்னாண்டிவலசை, மேத லோடை, தாதனேந்தல், உத்தரவை, வண்ணாங்குண்டு) ஜன.23ம் தேதிக்குள் தேவையான சான்றுகளுடன் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். *ஷேர் பண்ணுங்க
News January 20, 2026
பரமக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் மற்றும் நாய் பலி

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகவள்ளி (50). நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது வயலில் அறுந்து மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த நாயும் மின்கம்பியில் சிக்கி இறந்தது. தகவலறிந்த பரமக்குடி போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News January 20, 2026
இராம்நாடு: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) இங்கே <


