News March 4, 2025

ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

image

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் கொலை வழக்கானது, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டதால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டிஐஜி மற்றும் தஞ்சை எஸ்.பி.யை நியமித்து உத்தரவிட்டனர்.

Similar News

News March 4, 2025

இவரா அந்த பாலியல் குற்றவாளி?

image

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்‌ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சிவசேனா கட்சி (ஷிண்டே) நிர்வாகி பியூஷ் எனத் தெரியவந்துள்ளது. இவரது தலைமையிலான குழுவே, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. பியூஷ் முன்னதாக பாஜக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் மொத்தம் 7 பேர் மீது போக்சோ பாய்ந்துள்ளது.

News March 4, 2025

ஃபைனல் செல்லுமா இந்தியா?

image

இந்தியா- ஆஸி. அணிகளுக்கு இடையிலான CT தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணிக்கு துபாயில் போட்டி தொடங்குகிறது. உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸி.யை பழிதீர்க்க இந்தியா எதிர்பார்த்து இருக்கிறது. அதேபோல், இந்த போட்டியை வென்று, ஃபைனலுக்குச் செல்ல ஆஸி. அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது.

News March 4, 2025

ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

image

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!