News April 10, 2025
நிர்வாகிகளுடன் ராமதாஸ், தொண்டர்களுடன் அன்புமணி

பாமகவின் தலைவராக இனி இருப்பேன் என்று ராமதாஸ் அறிவித்ததை தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, ஜி.கே.மணி, மூர்த்தி, பாமக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து பேச இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அன்புமணியை அவரின் ஆதாரவாளர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 6, 2025
அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.


