News August 5, 2025
ராமதாஸ் செல்போன் ஹக்… அன்புமணி மீது புகார்

ராமதாஸின் செல்போன் வைபை மூலம் ஹக் செய்யப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அன்புமணியின் ஆதரவாளர் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்புமணியின் நிதி மேலாளர் சசிகுமார் மூலம்தான் வைஃபை மோடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே அன்புமணி ஒட்டுக்கேட்பு கருவியை தனது நாற்காலியில் வைத்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 5, 2025
போதிய மருத்துவர்கள் இல்லை: திமுக அரசை சாடிய OPS

அரசு மருத்துவக் கல்லூரி ஹாஸ்பிடல்களில் மருத்துவரே இல்லாத அவல நிலையை திமுக உருவாக்கியுள்ளதாக OPS குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர், புதுக்கோட்டை அரசு ஹாஸ்பிடல்களில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததை மறைக்க, மற்ற ஹாஸ்பிடல்களில் இருந்து திடீரென 27 டாக்டர்களை அங்கு மாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அந்தந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியடைவதாகவும் சாடியுள்ளார்.
News August 5, 2025
10 சீட்.. திமுக கூட்டணியில் தேமுதிக?

திமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாம். கூட்டணி முடிவில் பிரேமலதா மிகவும் சஸ்பென்ஸாக காய்களை நகர்த்தி வருகிறார். திமுக கூட்டணியில் 9 சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், 12 சீட் வேண்டும் என்று பிரேமலதா அடம் பிடிக்கிறாராம். இன்னும் ஒரு சீட் கூடுதலாக கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டதாம். கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி என பேச்சு அடிபடுகிறது.
News August 5, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

நேற்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,585 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் குறைந்து 24,611 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மீண்டும் டிரம்ப் வரியை உயர்த்த உள்ளதாக எச்சரித்துள்ளதால் அதன் தாக்கம் பங்குசந்தையில் நிலவுவதாக கூறப்படுகிறது.