News March 30, 2025
ரம்ஜான் பண்டிகை: தாறுமாறாக உயர்ந்த ஆடு, கோழியின் விலை

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நாளை கொண்டாடப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் கால்நடை சந்தைகள் களைகட்டி வருகின்றன. சிறிய ஆடுகள் முதல் பெரிய ஆடுகள் வரை விலை ₹10,000 முதல் ₹30,000 வரை விற்கப்படுகிறது. அதுவும், ஒரு ஆட்டுக்கு குறைந்தபட்சம் ₹3000 முதல் ₹5000 வரை விலை அதிகரித்துள்ளது. அதேபோல், கோழி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
Similar News
News April 1, 2025
இந்த கொடூர கொலையே சாட்சி: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

தி.மலையில் போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், போதைப்பொருட்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி என விமர்சித்த அவர், விளம்பர ஷூட்டிங்கில் வந்து ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.
News April 1, 2025
பங்குச்சந்தைகள் கடும் சரிவு

நிதியாண்டின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவினை கண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 354 புள்ளிகளையும் சென்செக்ஸ் 1390 புள்ளிகளையும் இழந்துள்ளது. கடந்த சில நாள்களாக மேல் நோக்கி சென்று கொண்டிருந்த பங்குச்சந்தை, இன்று சரிவடைந்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.