News April 23, 2025

பஹல்காமில் அமரன் சூட்டிங்கில்.. ராஜ்குமார் உருக்கம்

image

ஆண்டுதோறும் 2 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம் ‘காஷ்மீரின் இதயம் போன்றது’ என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலானது மனிதம், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு ஒரு பேரிடி என தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமரன் படப்பிடிப்பின்போது அங்குள்ள மக்கள் அன்போடு நடந்துகொண்டனர் என்றும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

இந்தியா – சீனா விமான சேவை விரைவில் தொடக்கம்

image

இந்தியா – சீனா நேரடி விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து கல்வான் தாக்குதல் ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டு வருவதால், அடுத்த மாதம் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 13, 2025

மும்பை அணியின் கேப்டனாகும் CSK வீரர்

image

கடந்த IPL சீசனில் CSK-வின் இளஞ்சிங்கமாக களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, இந்தியா U19 அணியின் கேப்டனாக வழிநடத்தினார். இந்நிலையில், புச்சி பாபு கோப்பை (Buchi Babu Trophy) தொடரில், மும்பை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகள் ஆக.18 – செப்.9 வரை சென்னையில் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடந்த கிளப் போட்டியில் 48 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார் ஆயுஷ்.

News August 13, 2025

ராஜினாமா செய்கிறார் மதுரை மேயர்

image

மதுரை மேயர் இந்திராணி (திமுக) ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹150 கோடி முறைகேடு விவகாரத்தில் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது இந்திராணியும் ராஜினாமா செய்யவுள்ளார்.

error: Content is protected !!