News May 7, 2025

இளைஞர்களுக்கு ரஜினி வேதனையுடன் அட்வைஸ்

image

இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கியுள்ளனர் என்று ரஜினி வேதனையுடன் தெரிவித்துள்ளார். செல்போன் யுகத்தில் இளைஞர்களுக்கு பாரத நாட்டின் கலாசாரம் தெரியவில்லை. வெளிநாட்டினரே மேற்கத்திய கலாசாரம் வேண்டாம் என்று இந்திய கலாசாரம் நோக்கி வருகின்றனர் எனக் கூறிய அவர், உண்மையான நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும் நம் நாட்டின் கலாசாரம் இளைஞர்களிடம் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

image

பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பிஸ்கெட்டில் உள்ள துளைகள் ‘Dockers’ என அழைக்கப்படுகிறது. பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது. இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம். 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.

News December 4, 2025

BREAKING: இன்றே தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவு

image

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அப்போது மதுரை காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் கோர்ட் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News December 4, 2025

இந்தியா இதை செய்தாக வேண்டும்: ரஷ்ய MLA

image

S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க, ரஷ்ய அதிபர் புடினிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பாட்னாவில் பிறந்த ரஷ்ய MLA-வான அபே சிங் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற அமைப்பு சீனாவிடம் கூட இல்லை எனவும், வேறு நாடுகளுக்கு விற்காமல் ரஷ்யா மட்டுமே பயன்படுத்தும் இந்த அமைப்பை இந்தியா பெற்றால், மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் குருஸ்க் பகுதி MLA-ஆக அபே சிங் உள்ளார்.

error: Content is protected !!