News January 6, 2025
ஆளுநர் வெளியேறியது குறித்து ராஜ் பவன் விளக்கம்

சட்டப்பேரவையில் உரையை தொடங்குவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மட்டும் இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் ராஜ்பவன் குற்றம்சாட்டியுள்ளது. இது தேசிய கீதத்துக்கு அவமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
PM மோடியின் மதுரை பொதுக்கூட்டத்தை தடுத்த EPS

மதுரையில் வரும் 23-ம் தேதி PM மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு EPS தான் காரணம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திருப்பரங்குன்றத்தில் PM மோடி தரிசனம் செய்வதாக இருந்தது. இதனால், சிறுபான்மையினரிடம் ADMK-க்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும் என EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
News January 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 15, தை 1 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 1:00 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 15, 2026
ELECTION: தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா SDPI?

மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாஸ் லீடராக வரும் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எங்கள் கட்சி மாநில குழு கூட்டம் நடைபெறும். அதில் தவெகவா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


