News May 23, 2024
20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இரவிலும் கனமழை தொடர்வதால் மக்கள் கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி கிடையாது: ராமதாஸ் தரப்பு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக <<17715384>>வழக்கறிஞர் பாலு<<>> சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில் பாமகவுக்கு சின்னம் மாம்பழம்தான்; தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலை வழக்கறிஞர் பாலு தவறாக பரப்புகிறார் என்று ராமதாஸ் அணி பொதுச்செயலாளர் முரளி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
News September 15, 2025
பி.எட்., படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் 2 அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள் உள்ளதாகவும், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் www.tngasa.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 15, 2025
ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: SC

ஒப்பந்த நர்ஸ்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று SC தெரிவித்துள்ளது. ஒப்பந்த நர்ஸ்களின் சம்பளம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுவதாக கடுமையாக சாடியுள்ளது. இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கும் நிலையில், சம்பளம் கொடுக்க பணமில்லையா என்றும் SC கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய அரசு, நர்ஸ் சங்கம் பதிலளிக்க SC உத்தரவிட்டுள்ளது.