News October 9, 2025
18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பொழியும்

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
Similar News
News October 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 9, புரட்டாசி 23 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 01:00 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை
News October 9, 2025
Cinema Roundup: ‘பைசன்’ படத்திற்கு U/A சான்று

*துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *தெலுங்கில் ‘பைசன்’ படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. *துல்கர் சல்மானின் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ₹3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல். * கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ அக்.23-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்.
News October 9, 2025
20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.