News April 23, 2025
4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வருகிற 28-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
இதுதான் அம்பேத்கரின் வெற்றி: CM ஸ்டாலின்

கல்வியால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிப்பதாக கூறிய அவர், இதுதான் அம்பேத்கரின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையே ஒரு பாடம் எனவும், அந்த பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News December 6, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விஜய் அறிக்கை?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் மெளனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், ‘ஜோசப் விஜய்’ என்ற அடையாளத்தை வைத்து ஏற்கெனவே பாஜக, விஜய்யை விமர்சிப்பதால், இரு மதங்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் ஏதும் பேச வேண்டாம் என விஜய் எண்ணுவதாக தவெகவினர் கூறுகின்றனர். கோர்ட்டில் இவ்வழக்கு செல்வதை பொறுத்து, விஜய் விரைவில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
News December 6, 2025
விராட், ரோஹித்தை முந்திய 14 வயது கிரிக்கெட்டர்!

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபலமான வீரர்கள் என்றால் கோலியும், ரோஹித்தும்தான். அதுவும் இவர்கள் ஓய்வுபெறுவார்கள் என பேசப்பட்டதால் அடிக்கடி ஹெட்லைன்சில் இடம்பெறுகின்றனர். ஆனாலும், கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் இவர்கள் இடம்பெறவில்லை. மாறாக IPL-ல் அசத்திய 14 வயது கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர்தான் Most-Searched Personalities in 2025 லிஸ்டில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.


