News April 23, 2025
4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வருகிற 28-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 23, 2025
எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வு

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. ஒரு யூனிட் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்டவை ரூ.1,000 உயர்த்தப்படும் என்று அதன் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். எனினும், ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4,900-ல் இருந்து ரூ.6,450ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.3,900ல் இருந்து ரூ.5,523ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பி.சாண்ட் விலை ரூ.5,800ல் இருந்து ரூ.7,552ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
News April 23, 2025
கில்லுக்கு குவியும் வெற்றிகள்.. பாராட்டிய முன்னாள் வீரர்

ஒரு பேட்ஸ்மேனாக அசத்துவது மட்டுமின்றி கேப்டனாகவும் களத்தில் மிகச் சிறப்பாக ஷுப்மன் கில் செயல்படுவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். முன்பு வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் தற்போது மிகச் சிறப்பான கேப்டனாக மாறியுள்ளதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
News April 23, 2025
தீவிரவாத தாக்குதல்… மறுக்கும் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அஷிஃப் தெரிவித்துள்ளார். நாங்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுப்பதில்லை எனவும் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்களின் எதிர்வினைத் தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.