News March 1, 2025

இரவு 10 மணி வரை மழை

image

காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, இரவில் வீட்டிற்கு செல்வோர் சாலைகளில் பார்த்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News March 2, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 2, 2025

8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி – மின்னலுடன் மழை

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக முன்னறிவித்துள்ளது. இதேபோல், நெல்லை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News March 2, 2025

சாம்பியன்ஸ் டிராஃபி Final மேட்ச் இப்படிதான் இருக்குமா?

image

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதியில், IND, AUS, NZ, SA மல்லுக்கட்ட போகின்றன. 4 அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எனினும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் வலுவாக உள்ளது. அதேபோல் மற்ற அணிகளும் வலுவாக இருந்தாலும் AUS, SA-ஐ வெளியேற்றிவிட்டு, இறுதிப்போட்டியில் IND vs NZ இடையேதான் மோதல் இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

error: Content is protected !!