News September 22, 2024

இந்த மாவட்டங்களில் காலை 7 மணிவரை மழை

image

இன்று காலை 7 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற விவரத்தை சென்னை மண்டல வானிலை மையம் (RMC) வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், தி. மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா..?

image

கோயிலில் தேங்காய் உடைக்கும் போது, பூ வந்தால் நல்லது என்றும், கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேங்காய் அழுகி இருந்தால், அபசகுணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கியதற்கான அறிகுறி என்ற ஆன்மிக விளக்கங்களும் உள்ளன. ஆகவே, மனம் சஞ்சலம் அடைய வேண்டாம். SHARE IT.

News August 22, 2025

முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி

image

முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி(91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

News August 22, 2025

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை: ஐகோர்ட்

image

நாளை சென்னை கூவத்தூரில் நடைபெறும், அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு <<17481538>>தடை கோரி<<>>, செய்யூர் MLA பனையூர் பாபு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!