News October 14, 2024

சென்னைக்கு மழையால் அச்சுறுத்தலா? இத பாருங்க

image

சென்னையில் நாளை முதல் அதிகனமழை இருக்கும் என்பதால் மக்கள் ஒருவித பீதியில் உள்ளனர். இந்நிலையில், வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். “சென்னையில் பெரிய மழை வருவது உண்மைதான். ஆனால், இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. அதனால் மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். வெளியே வருவதை தவிர்த்தாலே போதுமானது. வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம்” என்றார்.

Similar News

News August 17, 2025

அப்படி சொல்லவே இல்ல: அந்தர் பல்டி அடித்த அஸ்வின்

image

CSK அணிக்கு டெவால்ட் பிரேவிஸ் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து CSK வீரர் அஸ்வின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு <<17426625>>CSK விளக்கமும்<<>> அளித்திருந்தது. இந்நிலையில், அஸ்வின் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். பிரேவிஸ் விவகாரத்தில் பிசிசிஐ விதிகளை CSK மீறியதாக நான் சொல்லவில்லை, யார் மீதும் தவறில்லை எனக் கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார் அஸ்வின்.

News August 17, 2025

கவர்னர் R.N.ரவியை மாற்றக் கூடாது.. ஸ்டாலின்

image

தமிழ்தாய் வாழ்த்தை மதிக்காத R.N.ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் கவர்னர் கம்பு சுத்தலாம், தமிழ்நாட்டில் கம்பு சுத்த கூடாது எனக் கூறிய அவர், R.N.ரவி தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும், அப்போதுதான் தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வார் எனத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு எதிராக சிலர் அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும் சாடினார்

News August 17, 2025

ராமதாஸே பாமக தலைவர்: தீர்மானம் நிறைவேற்றம்

image

ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதல் தீர்மானமாக, ராமதாஸே கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவார் என கட்சியின் கெளரவத் தலைவர் GK மணி தெரிவித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!