News August 16, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், கரூர், நாமக்கலில் இடியுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.

Similar News

News December 8, 2025

விழுப்புரம்: கார் ஏறி முதியவர் பரிதாப பலி!

image

சென்னை புழல் கதிர்வேட்டைச் சேர்ந்த 68 வயது சேவியர் பெர்ணான்டோ, கடந்த 1-ம் தேதி திண்டிவனம் சாரம் லேபை பகுதியில் சாலையைக் கடந்தபோது, அவர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், ஓலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டுச் சென்ற காரைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

image

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.

News December 8, 2025

வங்கியில் 996 காலியிடங்கள், ₹51,000 சம்பளம்: APPLY

image

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ₹51,000. வயது வரம்பு: 20 – 35 வரை. தேர்வு: Personal / Telephonic / Video interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.23. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!