News June 5, 2024
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகாசி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், தருமபுரி, சென்னை, காஞ்சி, தி.மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமாக செல்லவும்.
Similar News
News March 4, 2026
உங்கள் உடல் உறுப்புகளை கொல்லும் உணவுகள்

நமது உடலில் உள்ள அனைத்தும் சீராக இயங்கினால் மட்டுமே காலத்துக்கும் நாம் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் உணவு பழக்கங்களால் இது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிப்போய் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் சில பொருள்கள் உங்கள் உடல் உறுப்புகளை மெல்ல கொல்கிறதாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை வலதுபக்கம் SWIPE பண்ணுங்கள். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News March 4, 2026
திமுகவில் இருந்து விலகல் அதிமுகவில் இணைந்தார்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில், மு.க.அழகிரிக்கு வலது கை போல் செயல்பட்டவரும், அழகிரி பேரவை ஈரோடு மாவட்டத் தலைவருமான சுகுணா சத்தியன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். விரைவில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ்ஸை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
News March 4, 2026
விஜய் ஜெயிப்பது டவுட்: கார்த்தி சிதம்பரம்

தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படும் நிலையில், அதை கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேர்தலில் விஜய்யின் தாக்கம் குறித்த கேள்விக்கு, விஜய்க்கு உள்ள ரசிகர் கூட்டம், ஆதரவு கூட்டமாக மாறலாம் என்றும், அந்த ஆதரவு கூட்டம், வாக்கு வங்கியாக மாறலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அந்த வாக்குகள், சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறிதான் என்று அவர் கூறியுள்ளார்.


