News June 5, 2024
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகாசி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், தருமபுரி, சென்னை, காஞ்சி, தி.மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமாக செல்லவும்.
Similar News
News September 22, 2025
இரவு நன்றாக தூங்க உதவும் உணவுகள்

இரவில் உட்கொள்ளும் சில உணவுகள் நன்றாக தூங்க உதவும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவற்றை இரவு உணவில் அல்லது உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், உங்களுக்கு வேறு ஏதேனும் தூக்கத்திற்கு உதவு உணவு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
கொள்கை படையாய் திரண்ட மக்கள்: ஸ்டாலின்

மாநிலம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், அவ்வாறு கடந்த 2 நாள்களில் 72 திமுக மாவட்டங்களிலும் இந்த உறுதிமொழியை ஏற்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த உறுதிமொழியை ஏற்பதற்காக கொள்கை படையாய் திரண்ட மக்களுக்கும் நன்றி என்றும் ஸ்டாலின் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News September 22, 2025
5 மனைவிகள், 12 குழந்தைகள் உடன் வாழ்ந்த MR ராதா

ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் உடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்த MR ராதாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பின்னர், மனைவி, மகன் இருவரும் அம்மை நோயால் இறந்தனர். இதனையடுத்து, சரஸ்வதி, தனலட்சுமி என்ற சகோதரிகள் மற்றும் ஜெயம்மாள் ஆகியோரை வெவ்வேறு ஊர்களுக்கு சென்றபோது திருமணம் செய்துகொண்ட நடிகவேளுக்கு மொத்தம் 12 குழந்தைகள். கடைசியாக திருமணம் செய்த கீதா ராதாவின் குழந்தைகளே ராதிகா, நிரோஷா.