News March 18, 2025

6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 23 வரை, TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல மார்ச் 21 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 18, 2025

3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD

image

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது வரை மழை பெய்ய கூடும் என IMD கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (1/2)

image

போர்க்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா? என்பார்கள். ஆனால் போர் வடிவம் இப்போது மாறிவிட்டது. அதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர் உதாரணம். அமெரிக்காவுக்கே ரஷ்யா அச்சுறுத்தலாக இருந்தாலும், தன்னிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தை வைத்து ரஷ்யாவையே மிரள வைத்து வருகிறது உக்ரைன். அப்படி என்ன மாதரியான ஆயுதத்தை இந்த போரில் உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது தெரியுமா? ட்ரோன்கள்தான்…

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (2/2)

image

ட்ரோன்களை தரையில் பயன்படுத்தும் உத்திதான் உக்ரைனுக்கு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது டிரக்குகள் போல இருக்கும் ட்ரோன்கள். இவை ரஷ்ய எல்லைக்குள் புகுந்து குண்டுகள் வைப்பது, கண்ணிவெடிகளை புதைப்பது என மிரள வைக்கிறது. வீரர்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்களையும் கொண்டு செல்கிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர, போர் தந்திரங்களும் மாறுகின்றன!

error: Content is protected !!