News April 15, 2025
இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை

இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அவை எவை-எவை? இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு: தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நெல்லை, குமரி. இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், ஈரோடு, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி.
Similar News
News August 23, 2025
அட்லி-அல்லு அர்ஜுன் படம்.. Escape Mode-ல் தீபிகா?

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்தின் ஷூட்டிங், கதை விவாதம் என்ற பெயரில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே போகிறதாம். ஃப்ளாப் பட்டியலில் தானும் சேரக்கூடாது என்பதற்காக அலர்ட் மோடில் இருக்கும் அட்லி, கதை விவாதக் குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு விவாதத்திற்கும் ஆஜராகிவருகிறாராம். ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காததால், ‘எஸ்கேப் ஆகிவிடலாமா’ என்று தீபிகா படுகோன் யோசிப்பதாக கூறப்படுகிறது.
News August 23, 2025
விஜய் அபார சாதனை.. அரசியலில் புதிய வரலாறு

இந்திய அரசியல் வரலாற்றில் அதிக தொண்டர்கள் பங்கேற்ற மாநாடு(14.78 லட்சம்) என தவெகவின் மதுரை மாநாடு சாதனை படைத்திருப்பதாக Times of India தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக (11.86 லட்சம்), சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி(11.03 லட்சம்), தெலுங்கு தேசம் கட்சி(10.55 லட்சம்), பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி(5.13 லட்சம்) ஆகியவை இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாகுமா?
News August 23, 2025
வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.