News May 16, 2024
பிற்பகல் வரை 14 மாவட்டங்களில் மழை

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் (பிற்பகல் 1 மணி வரை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News August 8, 2025
மாநாட்டில் விஜய்தான் ஒரே பிரபலம்: போலீஸுக்கு பதில்

மதுரை மாநாட்டில் விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகரும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என தவெக தெரிவித்துள்ளது. மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறையின் கேள்விகளுக்கு தவெக பதில் அளித்துள்ளது. பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
News August 8, 2025
ஆபரண தங்கம் 1 சவரன் விரைவில் ₹80,000-ஐ தாண்டும்!

ஆபரண தங்கத்தின் விலை <<17338724>>1 சவரன் 75,000-ஐ<<>> கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது வெகு விரைவில் ₹80,000-ஐ தாண்டும் என நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். டிரம்பின் வரி அறிவிப்பு உலக முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பி இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாம். தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கம் வாங்குற கனவு கனவாவே போயிருமோ?
News August 8, 2025
9-ம் வகுப்பிலே கரியரை தீர்மானிக்கலாம்: அமைச்சர்

சென்னையில் மாநில கல்விக்கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார். இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். 9-ம் வகுப்பிலே கரியர் வழிகாட்டி பெற்று மாணவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.