News April 11, 2025
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
பூஜ்ஜிய நன்றியுணர்வுடன் உக்ரைன்: டிரம்ப்

ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான US-ன் முயற்சிகளுக்கு உக்ரைன் பூஜ்ஜிய நன்றியுணர்வை காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பா, தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார். US, உக்ரைன், ஐரோப்பா நாடுகள், அமைதியை நிலைநாட்டுவதற்கான வரைவு திட்டம் பற்றி விவாதிக்கையில், டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
News November 24, 2025
திமுக ஆட்சி சமூக நீதியின் இருண்ட காலம்: அன்புமணி

திமுக ஆட்சியும், காலாவதியான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் 3 ஆண்டு பதவிக்காலமும் சமூகநீதியின் இருண்ட காலம் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த நவ.16 உடன் நிறைவடைந்த நிலையில், ஒரு வாரமாக புதிய ஆணையத்தை அமைக்காமல் தமிழக அரசு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் BC, MBC, Minority ஆகியோருக்கான நீதி கிடைக்காமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.
News November 24, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

இன்னும் 2 நாள்களில் புயல் உருவாக உள்ளதால், டெல்டா & தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து அந்தந்த கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழை பெய்து வருவதால் மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


