News April 11, 2025
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
குளு குளு தென்றலாக பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாவில், குளிர் காலத்தை ரசித்து மகிழும் புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில்லென்ற மூக்கு, குளிர்கால ஃபேஷன், ஹாட் சாக்லேட், சூரியனின் அரவணைப்பும் என்று அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குளு குளு தென்றலாக குளிர்காலத்தை என்ஜாய் செய்யும் பூஜாவின் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 4, 2025
அணு பேரழிவு நடந்த இடத்தில் செழித்து வளரும் உயிர்!

உலகின் மிகமோசமான அணு உலை பேரழிவு நடந்த பகுதியாக உக்ரைனின் செர்னோபில் உள்ளது. இங்கு நிலவும் அணு கதிர்வீச்சால் இன்று வரை மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்படும் நிலையில், கருப்பு பூஞ்சை எனும் ஒரே ஒரு உயிர் மட்டும் செழித்து வளர்ந்து வருகிறது. பிற தாவரங்கள் எப்படி சூரிய ஒளியை வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுகிறதோ, அதேபோல், இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சை ஆற்றலாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News December 4, 2025
ஆணுறைகளுக்கு வரி விதித்த சீனா.. ஏன் தெரியுமா?

ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மீது, 2026 ஜனவரி முதல் வரி விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், இத்தகைய வரி விதிப்பின் மூலம் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என சீனா நம்புகிறது. ஒரு குழந்தை கொள்கையை கடுமையாக கடைபிடித்து வந்த சீனா, 1993 முதல் கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


