News April 11, 2025
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
அமித் ஷாவின் தமிழக வருகையில் மாற்றம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜன.4ம் தேதியே தமிழ்நாட்டிற்கு வருகிறார். திருச்சி மற்றும் புதுக்கோட்டைக்கு 2 நாள் பயணமாக வரும் ஜனவரி 9,10-ம் தேதிகளில் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு முன்னதாகவே வரும் 4,5-ம் தேதிகளில் அவர் தமிழகத்திற்கு வருகிறார். அப்போது நயினார் நாகேந்திரனின் பிரச்சார இறுதி நிகழ்ச்சி மற்றும் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளார்.
News December 31, 2025
தமிழ் பாடகி காலமானார்.. உருக்கமாக இரங்கல்

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பல நாட்டுப்புற பாடல்கள் பாடிய அவர், திரைத்துறையிலும் புகழ்பெற்றவராக இருந்தார். நமது சென்னை சங்கமம் கலைவிழாவிலும் பங்கேற்று பாடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆழ்த்த இரங்கல் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News December 31, 2025
பயங்கர வெடிபொருள்கள் பறிமுதல்.. புத்தாண்டில் சதி?

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், ராஜஸ்தானில் பயங்கர வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூரியா உரம் என்ற பெயரில் காரில் கடத்தி செல்லப்பட்ட 150 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 200 வெடிக்கும் பேட்டரிகள் மற்றும் 1,100 மீட்டர் வயரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


