News December 14, 2024
காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

இன்று காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Similar News
News March 7, 2026
3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.
News March 7, 2026
வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 7, 2026
ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.


