News April 13, 2025
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, காேவை, விருதுநகரில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News December 30, 2025
BREAKING: மீண்டும் கைது.. பதற்றம் உருவானது

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். முன்னதாக, இன்று காலை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட <<18711270>>தூய்மை பணியாளர்கள் கைது<<>> செய்யப்பட்டனர்.
News December 30, 2025
CM ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

<<18693605>>திருத்தணியில்<<>> வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மனித சமூகத்தின் மதிப்பு புரியாமல் தடம்புரண்டு அலையும் இளைஞர்களை நேர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். போதை கலாசாரம், சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை ஆகியவற்றின் மீது CM ஸ்டாலின் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 30, 2025
நாடு முழுவதும் நாளை முடங்குகிறது

நாடு முழுவதும் நாளை (டிச.31) ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதனால், இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவை முடங்கலாம் என கூறப்படுகிறது. எனவே, புத்தாண்டுக்கு தேவையான பொருள்களை இன்றே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.


