News April 29, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News

News December 16, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து போராட்டம்: திருமா

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தங்களுக்கு வேண்டிய நீதிபதியை வைத்து மதவெறி கும்பல் பிரச்னையை கிளப்பியுள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். RSS, பாஜக ஆதரவு நபர்களை நீதிபதிகளாக நியமித்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகளை மோடி அரசு வழங்க செய்கிறது. எனவே, கொலிஜியம் முறையை மாற்றவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்தும் வரும் 22-ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

News December 16, 2025

PF பணத்தை இனி ATM, UPI மூலம் எடுக்கலாம்..!

image

EPF பணத்தை ATM, UPI மூலம் எடுக்கும் வசதியை, 2026 மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். EPF கணக்குடன் வங்கி கணக்கை இணைத்தால் போதுமானது; 75% பணத்தை எடுக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது பல படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் நிலை உள்ளது எனவும், அதை தொடர்ந்து எளிமையாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

விஜய், அதிமுக கூட்டணியா?.. செங்கோட்டையன் அறிவித்தார்

image

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தேர்தல் களம் எப்படி செல்லும் என யாராலும் யூகிக்க முடியாது, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பதிலளித்தார். முன்பு, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தலைவர் விஜய் தான் முடிவு எடுப்பார் என கூறி வந்தவர், தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!