News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News January 2, 2026
கடமையே முக்கியம்.. புத்தாண்டு பணியில் நல் உள்ளங்கள்

2026 புத்தாண்டு பிறப்பை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடிய வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் அயராது உழைத்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளனர். நமக்காக பணியாற்றிய இந்த நல் உள்ளங்களை லைக் போட்டு வாழ்த்துங்க!
News January 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 2, 2026
கின்னஸ் சாதனை படைத்த ‘குண்டு மனிதர்’ மரணம்

மெக்ஸிகோவின் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41) என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 600 கிலோ எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தார். அதீத எடையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை மூலம் எடையை 260-ஆக குறைத்திருந்தார். 2020-ல் கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த அவர், சிறுநீரக பிரச்னையால் உயிரிழந்துள்ளது.


