News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News January 11, 2026
10 மணி நேரத்தில் பராசக்தி சென்சார் சேஞ்சஸ்

‘பராசக்தி’ ரிலீஸுக்கு முந்தைய நாள் (ஜன.9) தான் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு 25 மாற்றங்களை CBFC கூறியதும், ராணுவ முகாம் போல் படக்குழு வேலை செய்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். என்ன மாற்றங்களை செய்யலாம் என விரைவாக & தெளிவாக பரிசீலித்ததாகவும், 10 மணி நேரத்தில் படத்தில் மாற்றங்களை மேற்கொண்டதாகவும் சிவா தெரிவித்துள்ளார். நீங்கள் படம் பார்த்திருந்தால் சென்சார் மாற்றங்கள் எப்படி உள்ளன?
News January 11, 2026
பாமகவுக்காக விசிகவை சரிகட்டுகிறதா திமுக?

அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால், ராமதாஸ் தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். வன்னியர் சங்கம் முழுவதும் ராமதாஸ் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவரது தரப்பை விட திமுகவுக்கு மனமில்லை என்கின்றனர். அதேநேரம், INDIA கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும் நிலையில் உள்ளதால், அவர்களை சரிகட்டவும் திமுக மூத்த அமைச்சர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. ராமதாஸ் – திருமா கூட்டணி சாத்தியமா?
News January 11, 2026
பொங்கலுக்கு பிறகும் ₹3000? வெளியான புதிய தகவல்

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ₹3000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளியூரில் இருப்பவர்கள் பொங்கல் அன்றுதான் சொந்த ஊர் திரும்புவார்கள் என்பதால், பொங்கல் பரிசை வாங்க ஏதுவாக கடைசி தேதியை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் (ஜன.18-ம் தேதி) பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


