News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News December 22, 2025
அடுத்த 2 மணிநேரம் தூங்காதீங்க..

இந்தாண்டின் கடைசி வானியல் நிகழ்வான ‘உர்சிட் விண்கல் மழை’ பொழிவை இன்றிரவு வானில் காணலாம். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17 – 26 தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது. 8P/டட்டில் என்ற வால் நட்சத்திரம், சூரியனுக்கு அருகில் கடந்து செல்லும்போது, அது உருகி, நெருப்புக் கோள்களைப் போல பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இந்தியாவில் ஒளி மாசுபாடு இல்லாத தெளிவான வானில் இந்த அற்புதக் காட்சியை காண முடியும்.
News December 22, 2025
₹1 லட்சத்துக்கு ஆணுறை.. யாரு சாமி நீ?

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ஆண்டு இறுதி அறிக்கையில் ஷாப்பிங் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர், ஒரு வருடத்தில் ₹1.06 லட்சத்துக்கு ஆணுறைகள் மட்டும் வாங்கியுள்ளார். அவர் மாதத்திற்கு சராசரியாக 19 ஆர்டர்கள் வீதம், மொத்தம் 228 ஆர்டர்களை செய்துள்ளார். மேலும், ஸ்விக்கி நிறுவனம், தங்களுக்கு வரும் ஒவ்வொரு 127 ஆர்டர்களில், ஒன்று ஆணுறை ஆர்டர் என்று தெரிவித்துள்ளது.
News December 22, 2025
NDA-வில் அமமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 முதல் 7 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதாக பரவிய தகவலை டிடிவி தினகரன் மறுத்துள்ளார். அமமுக இன்னும் கூட்டணி முடிவையே எடுக்கவில்லை என்றும் வேண்டுமென்ற சிலர் இந்த வதந்திகளை பரப்புவதாகவும் சாடினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலிலேயே தங்களுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட இருந்ததாகவும், நாங்கள்தான் 2 தொகுதிகளில் போட்டியிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.


