News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News December 20, 2025
அலர்ட்… மீண்டும் மழை வெளுக்கப் போகுது!

2 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, டிச.25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஊட்டியில் உறைபனிக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாலை, இரவு நேரங்களில் கவனமாக இருங்கள்!
News December 20, 2025
டெல்லி: காற்றுமாசை தடுக்க அரசுப் பள்ளிகளில் Air Purifiers

டெல்லியின் காற்றுமாசு நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது அங்கு பெரும் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளின் நலம் காக்க டெல்லி அரசு ‘பிரீத் ஸ்மார்ட்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 10,000 அரசுப் பள்ளி வகுப்பறைகளில் காற்றை சுத்தப்படுத்தும் Air Purifiers நிறுவப்படும். விரைவில் இது 38,000 வகுப்பறைகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
BREAKING: விஜய் கட்சியில் அதிரடி நீக்கம்

தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் கட்சி பதவியை பறித்து புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெகவில் பதவி வழங்குவதாகக் கூறி பெண் நிர்வாகியிடம் செந்தில்நாதன் தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று SM-ல் வைரலாகி வருவது கவனிக்கத்தக்கது.


