News April 25, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News December 31, 2025

புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்!

image

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘ஜனநாயகன்’ டிரெய்லர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை ஜன.1-ம் தேதி படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், ஜன.2 மாலை டிரெய்லர் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஜன.4-ல் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு டிவியில் ஒளிபரப்பு ஆவதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யின் One Last Dance-ஐ பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?

News December 31, 2025

டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு

image

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபி ஆகவும், பால நாகதேவி குற்றப்பிரிவு டிஜிபி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ் தயாள் பொறுப்பேற்கவுள்ளார்.

News December 31, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

error: Content is protected !!