News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 16, 2026
FLASH: பொங்கல் விடுமுறை.. கூடுதலாக ஒரு சிறப்பு ரயில்!

பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை இயக்கிவரும் தெற்கு ரயில்வே நாகர்கோவில் – தாம்பரம் இடையே கூடுதலாக ஒரு ரயிலை(06160) அறிவித்துள்ளது. இது, ஜன.18-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக திங்கட்கிழமை காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு <
News January 16, 2026
அடுத்து அதிமுக ஆட்சி தான்! அடித்து சொன்ன EPS

TN-ல் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை விரட்ட மக்கள் காத்திருப்பதாக EPS தெரிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்த நாளையொட்டி (ஜன.17), தொண்டர்களுக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டினாலும் அதை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். TN மக்களுக்கு நல்லாட்சி தரும் கடமை, பொறுப்பு அதிமுகவினர் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.


