News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 15, 2026
திண்டுக்கல்லில் கேஸ் புக் பண்ண புது வழி!

திண்டுக்கல் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
News January 15, 2026
பொங்கல் நாளில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

தை பிறந்த முதல் நாளிலேயே அதிமுகவை நோக்கி முக்கியத் தலைவர் நகர்ந்து இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் பணியை EPS தீவிரப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இன்று, அமமுக மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி, EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 15, 2026
பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


