News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News December 15, 2025
கோயில் குளங்களில் காசு வீசுவது மூட நம்பிக்கையா?

முந்தைய காலங்களில் நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டன. செம்பு கிருமிநாசினி தன்மை கொண்டது என்பதால் நீரிலுள்ள கெட்ட நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்தியது. அதன் காரணமாக, கோயில் குளங்களை தூய்மையாக வைத்திருக்க செம்பு நாணயங்களை நீரில் வீசினர். காலப்போக்கில் நாணயங்கள் செம்பிலிருந்து பிற உலோகங்களுக்கு மாறினாலும், இப்பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த அறிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 15, 2025
இன்று ஜோர்டான் புறப்படும் PM மோடி

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கான 4 நாள் பயணத்தை இன்று PM மோடி தொடங்குகிறார். இந்த பயணத்தில் இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளார். மோடியின் இந்தப் பயணம் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 15, 2025
சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவில் ஐக்கியமாக நிர்வாகிகள் பலர், அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக அரியம்பாளையம் பேரூராட்சிச் செயலாளர் துரைசாமி மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார். அவருடன் அமமுக ஒன்றியச் செயலாளர் KC சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


