News April 25, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News November 21, 2025

7 தங்க பதக்கத்தை வென்ற இந்திய சிங்கப் பெண்கள்

image

உலகக் கோப்பை குத்துச்சண்டையில் நேற்று ஒரேநாளில் 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 48 கிலோ(KG) பிரிவில் மீனாட்சி, 54KG-ல் பிரீத்தி, 70KG-ல் பிரிவில் அருந்ததி சவுத்ரி, 80KG-ல் நுபுர், 51KG-ல் ஜதுமணி, 65KG-ல் அபினாஷ் ஜம்வால். 80KG-ல் அங்குஷ் பன்ஹால் ஆகியோர் தங்கத்தை முத்தமிட்டனர். மற்றொரு இந்தியா வீராங்கனை ஹிதேஷ், கஜகஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

News November 21, 2025

மெட்ரோ திட்டத்தில் பாஜகவுக்கு உள்நோக்கம்: செந்தில் பாலாஜி

image

மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் TN-க்கு BJP அரசு இதுவரை ஏதாவது சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

News November 21, 2025

பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி: அமைச்சர்

image

இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனையில் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழுந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!